Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் வந்திருந்தனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானமின்றி முடங்கி உள்ளதாகவும் இதனை நம்பி உள்ள நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளோம். இந்த தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் அண்டு சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை துவங்கி உள்ளோம். இதன் மூலமாக கடந்த இரு மாதங்களாக கிடைக்க பெற்ற உதவிகள் மூலம் இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவினோம்.
கோவை மாநகரில் 45 டான்ஸ் ஸ்டுடியோஸ் உள்ளது. அனைத்தும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இரு மாதங்களுக்கு வாடகையில் இருந்து விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்த தொழிலை நம்பி மேக்கப் செய்யும் 25 குடும்பங்கள் உள்ளது. கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த தங்களுக்கு அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.